>> Thursday, October 25, 2007

Add Video

வாழ்க்கைக் குறிப்பு
தமிழசிரியர் ஆ. அஜ்முதீன் அவர்கள் தஞ்சாவூர் மாவட்டத்தில் இராஜகிரி என்னும் கிராமத்தில் கிறித்தவ குடும்பத்தில் பிறந்தவர். தந்தை வி.பொ. ஆரோக்கியசாமி, தாய் சாந்தாமேரி. பெற்றோர் இவருக்கு இட்ட பெயர் ஜான்சன் கென்னடி என்பதாகும். தமது உழைப்பாலும் விடாமுயற்சியலும் உயர்ந்த இவர் தமது 27 ஆம் வயதில் இஸ்லாம் மார்க்கத்தால் ஈர்க்கப்பட்டு இஸ்லாத்தில் இணைந்து அஜ்முதீன் என்று தம் பெயரை மாற்றிக் கொண்டு இஸ்லாமியராக வாழ்ந்து வருகிறார்.


கல்வித்தகுதி


1. B.A. Tamil – 1995
2. B.Ed. Tamil – 1996
3. M.A. Tamil – 1997
4. S.L.E.T – 1999
5. Ph.D - 2003


இதர கல்வித்தகுதி


1. Diploma in Desk Top Publishing
2. Diploma in Computer Application
3. Diploma in PC Hardware
4. Diploma in Magneto Therapy
5. Typewriting in English (Junior)
6. Typewriting in Tamil (Junior)
7. Certificate Course - Tourism
8. Certificate Course - Gandhi’s Thought
9. Certificate Course –Music
10.Certificate Course –Tally


ஆய்வு


பாரதிதாசன் பல்கலைக்கழகதில் டக்டர் "வா.செ. குழந்தைசாமியின் தமிழியற்பணி - ஓர் ஆய்வு" என்னும் தலைப்பில் ஆய்வு செய்து டாக்டர் பட்டம் பெற்றுள்ளார்.


பணி


பூண்டி புஷ்பம் கல்லூரியில் தமிழ் விரிவுரையாளராகப் பணியாற்றியுள்ளார். இதழ்களில் இலக்கியக் கட்டுரைகள் எழுதியுள்ளார். மார்ச் 2000 முதல் அதிராம்பட்டினம், காதிர் முகைதீன் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் தமிழாசிரியராகப் பணியாற்றி வருகிறார்.


ஆற்றல்


நகைச்சுவையுடன் சொற்பொழிவாற்றும் நாவன்மை படைத்தவர். கவிஞர் கா.மு.செரீப், சிற்பி பாலசுப்ரமணியம் மற்றும் குன்றக்குடி அடிகளார் ஆகியோரிடம் பாரட்டுகளையும் வாழ்துகளையும் பெற்றவர்.


படைப்புகள்


1. வா.செ. குழந்தைசாமியின் பாரதியின் அறிவியல் பார்வை - ஓர் ஆய்வு (மார்ச் 2002)


2. டாக்டர் ஏ.பி.ஜெ. அப்துல் கலாம் அவர்களின் சாதனை வரலாறு (ஜுலை 2005)

Read more...

  © Blogger template Snowy Winter by Ourblogtemplates.com 2009

Back to TOP