ஐக்கிய நாடுகள் சபை குறித்த தகவல்கள்

>> Friday, February 26, 2010

ஐக்கிய நாடுகள் சபை குறித்த தகவல்கள்
-> ஐ.நா தினம் - oct 24.

-> ஐ.நா- வின் அலுவலக மொழிகள்:- சீனம், ஆங்கிலம், ருசிய, பிரான்ஸ், ஸ்பானிஷ், இவற்றுடன் அரபும் ஹிந்தியும் தற்போது கலந்துள்ளது.
-> ஐ.நா - வின் நிரந்தர உறுப்பினர்கள்:- அமெரிக்க, ரஷ்ய, இங்கிலாந்து, பிரான்ஸ், சீனா .
-> ஐ.நா - வின் தலைமை செயலகம் நியூயார்க் நகரில் அமைந்துள்ளது.
-> ஐ.நா- வின் பன்னாட்டு நீதிமன்றம் ஹாலந்து தலைநகரமான தி ஹக் நகரில் அமைந்துள்ளது.
-> UNICEF என அழைக்கப்படும் குழந்தை நல அமைப்பு 1946 துவங்கப்பட்டது.
-> UNESCO என அழைக்கப்படும் கல்வி மற்றும் அறிவியல் குறித்த பன்னாட்டு அமைப்பு 1946 ஆம் ஆண்டு பாரிஸ் நகரை தலைமை இடமாக கொண்டு செயல்படுகிறது.
-> உலக அளவில் பெரும் பிரச்சனைக்குரிய நோய்களை அழிக்க உலக சுகாதார நிறுவனம் 1943 துவங்கப்பட்டு ஜெனீவாவை தலைமை இடமாக கொண்டு செயல்படுகிறது.
-> உலக வங்கியின் தலைமை வாஷிங்டன் நகரில் அமைந்துள்ளது.
-> இந்தியா ஐ.நா வில் உறுப்பினர் ஆன வருடம் 30 oct 1945.
-> ஐ.நாவில் உறுப்பினர் ஆகாத ஒரே ஐரோப்பிய நாடு வாடிகன்.
-> ஐ.நா வில் இருந்து வெளியேற்றப்பட ஒரே நாடு தைவான்.
-> ஐ.நா தலைநகரம் அமைந்துள்ள இடம் டோக்கியோ.
-> ஐ.நா நூலகம் அமைந்துள்ள இடம் நியூயார்க்.
-> ஐ.நா வின் முதல் பொதுச் செயலாளர் டிரைக்வேல் (நோர்வே நாட்டைச் சார்ந்தவர்).

Read more...

சமச்சீர் கல்வி வரவேற்க வேண்டிய ஒன்றா?

>> Thursday, February 25, 2010

தமிழகம் முழுவதும் ஒரே வகையான பாடத்திட்டம் என்றால் யார் தான் வரவேற்க மாட்டர்.
நிச்சயம் வரவேற்க வேண்டிய ஒன்றுதான். வசதி பெற்றோர் / அற்றோர் என்ற வேறுபாடுகள் களைந்து அனைவருக்கும் கல்வி ஒருங்கே சென்று சேரும். அரசுப் பள்ளிகளில் தமிழ் வழியிலும் தற்போது கோளோச்சி வரும் ஆங்கிலப் பள்ளிகளான மெட்ரிக் பள்ளிகளில் ஆங்கிலம் வழியிலும் கல்வி கற்பிக்கப்படும் போல் தெரிகிறது. அப்படி இருப்பின் அதை எப்படி சமச்சீர் கல்வி எனப் பெருமைப்பட முடியும்.
ஆங்கிலம் அனைவருக்கும் அவசியம் என்ற இன்றைய நிலையில் அரசுப் பள்ளிகளில் மட்டும் தமிழ் என்பதை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும். அதற்க்கு தற்போதுள்ள கல்வி முறையே இருந்து விடலாமே. அவ்வாறு இன்றி அரசுப் பள்ளிகளிலேயே தமிழ் மற்றும் ஆங்கிலப் பிரிவு வைத்து விரும்பும் மொழியில் படிக்கும் வாய்ப்பினை நம்அரசு அளித்தால் அனைத்து மாநிலங்களுக்கும் கல்வியில் முன்னுதாரணமாக இருப்போமல்லவா.
சமச்சீர் கல்வியால் பெருத்த மாற்றம் ஒன்றும் ஏற்படப் போவதில்லை. தற்போது மெட்ரிக் பள்ளிகளாய் இருக்கும் அனைத்து பள்ளிகளும் CBSE பள்ளிகளாக மாற முயற்சித்துக் கொண்டுள்ளது. அப்படி மாறினால் மெட்ரிக் / அரசு பள்ளி என்ற போட்டி மறைந்து அரசுப் பாடத்திட்டம் / CBSE பாடத்திட்டம் என்ற யுத்தம் கிளம்பாதா?.
தமிழகத்தில் மட்டும் சமச்சீர் என்பதை விட இந்தியா முழுவதும் சமமாக தாய்மொழி / பிராந்திய மொழிகளில் கல்வி அமையப்பெருவதே சிறந்ததாய் இருக்கும்.
தற்போது கூறுங்கள் தமிழக சமச்சீர் கல்வி என்பது சிறந்ததா? வரவேற்க வேண்டியதா?

Read more...

  © Blogger template Snowy Winter by Ourblogtemplates.com 2009

Back to TOP